Posts

Showing posts from June, 2022

பண்டாரம்.

பண்டாரம், பரதேசி ஆகிய இரண்டு சொற்களும் ஒரே பொருளில் இக்காலத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பொழுதைய நடைமுறையில் இச்சொற்கள் உணவிற்குக் கூட வழியில்லாத ஏழைகளையே குறிக்கும். பண்டாரம் என்ற சொல்லுக்கு முதற்பொருள் 'பொன், வெள்ளி, முத்து போன்ற உயர் மதிப்பு உடைய பொருள்களைச் சேர்த்து வைக்கும் கருவூலம்' என்பதாகும். கி. பி. 13ஆம் நூற்றாண்டு வரை அரசுப் பண்டாரங்களைப் போலவே கோயில்களிலும் பண்டாரங்கள் இருந்தன. இப்பண்டாரங்களில் உயர் மதிப்புடைய தங்கம், வெள்ளியாலான சிலைகளும் நகைகளும் பாதுகாக்கப்பட்டன. கோயிலில் சமய நூல்களைச் சேர்த்துப் பேணி வைக்கும் இடம் 'சரஸ்வதி பண்டாரம்' என்றழைக்கப்பட்டதனைச் சுந்தர பாண்டியன் கல்வெட்டு மூலம் அறிகிறோம். இப்பண்டாரங்களின் வாசலில் நின்று காவல்பணி செய்து வந்தவர்களே இக்காலத்தில் 'பண்டாரம்' என்னும் சைவ மதம் சார்ந்த சாதியாராவர். இக்காலத்துக் காவலாளிகளைப் போல இவர்கள் நின்று கொண்டே காவல்பணி செய்யவில்லை. பண்டாரத்தின் வாசலில் அமர்ந்து கோயிலுக்குப் பூத்தொடுக்கும் வேலையில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் பூத்தொடுப்பதற்காகத் தரப்பட்ட நீண்ட கற்பலகைகளை இன்ற...

பிறந்த குழந்தைக்கு முதல் உணவு என்ன தெரியுமா?

'பிறந்த குழந்தைக்கு முதல் உணவு என்ன தெரியுமா?' என்றொரு பெண் என்னைக் கேட்டிருந்தாள். சேனை புகட்டுகிறது' என்றேன். 'அதென்ன சேன?' என்றாள். 'வேறொண்ணுமில்ல, அந்தக் காலத்துல மொத்த சனமும் மலையில தான கிடந்துச்சு. அப்ப, குழந்தைக்கி மொத சுவையா சுனையில் உள்ள தண்ணியதான் சொட்டு விடுவாகளாம். அதுக்குப் பேருதான் சுனை புகட்டுகிறது. மலங்காட்டுலர்ந்து இறங்குனப்புறம் இன்னமும் விடல அத', அவளேதான் எனக்குப் பதிலும் சொன்னாள். இன்றைக்குப் புளியைக் கரைத்து, பானகம் போலச் செய்து, நாக்கில் தடவுகிறார்கள். வயதில் மூத்தவர்கள்தான் தடவ வேண்டும். அப்படிச் செய்பவர்களின் குணம் அக்குழந்தைக்கும் வந்துசேருமென்பது நம்பிக்கை. புளிப்பும் இனிப்புமாய்ச் சொரசொரக்கும் விரலின் தொடுதலில் அக்குழந்தை புதுக் சுவையை உதப்பி வெளியே தள்ளுகிறது. மலையில் புகட்டிய தண்ணீர், மண்ணின் குணத்தைக் குழந்தைக்குத் தருகிறது; தரையில் புகட்டும் பாளகம் மனிதர்களின் குணத்தைத் தருகிறது; இதுதான் நம்பிக்கை. 

நாடாரின் மேலான நிலை.

நாடாரின் மேலான நிலை தொல்லியல் அலுவலரும் மிகச் சிறந்த ஆய்வாளரும் ஆன எஸ். இராமச்சந்திரனும், அ. கணேசன் என்பவரும் இணைந்து எழுதிய 'தோள்சீலைக் கலகம் தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்' (2010) என்ற நூலில் முக்கியமான சில கருத்துகள் வருகின்றன. இவை வருமாறு: நாடார்சாதியினரில் தென் தமிழகத்தில் தமிழகத்தில் நாட்டு நிர்வாகத்திலும், வரிபிரிக்கும் பொறுப்பிலும் இருந்தவர்கள் என்பது பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. இவர்கள் தமிழகத்தில் நாட்டு நிர்வாகத்திலும் வரிபிரிக்கும் பொறுப்பிலும் இருந்தனர். இவர்களில் குறுநிலத் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்களும் உண்டு. திருநெல்வேலி, தென்காசிப் பகுதிகளில் மட்டுமே செல்வாக்குடையவர்களாய் இருந்த பாண்டியர்கள் நாடாழ்வார் என அழைக்கப்பட்டிருக்கின்றனர். பிற்காலச் சோழர் காலத்தில் இப்பகுதியில் குடியேறிய பல தலைமுறைகளாய் வேரூன்றி வாழ்ந்த வலங்கை உய்யக்கொண்ட ரவிகுல சத்திரிய வம்சத்தவர்கள் நாடார்களே. இவர்களுடன் பாண்டிய வம்சத்தினர் உறவு கொண்டிருந்தனர். (மேற்படி நூல் ப. 24) வேணாடு அரசர்கள் காலத்தில் இவர்கள் குறுநிலத்தலைவர்களாய் இருந்தனர். நாகர்கோவில் நாகராஜா கோவில் முன்மண்டபத்தைக் குலச...

தொல்குடி பரதர்.

பரதவர்கள் தொல்குடிகள்தான். சங்க இலக்கியங்கள்ல அவர்களுக்கு ஒரு தனி அரசு இருந்ததா குறிப்பு இருக்கு. 'தென்பரதவர் மிடல்சாய வடவடுகர் வாளோட்டினார்' (புறம் 378) அப்படின்னு ஒரு சங்கப்பாடல் இருக்கு. இன்னமும் தூத்துக்குடில அதோட எச்சப்பாடல்லாம் இருக்கு.  பேரா.தொ.ப கொற்கைக் கடலில் முத்து உண்டானது போலவே சங்குகளும் உற்பத்தியாயின. பரதவர் கடலில் முழுகிச் சங்குகளை எடுத்தபோது, சங்கு முழங்கி ஊருக்குத் தெரி வித்தார்கள். இலங்கிரும் பரப்பின் எறிசுறா நீக்கி வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர் ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக் கலிகெழு கொற்கை' (அகம், 350:11-13) (வலம்புரி - வலம்புரிச் சங்கு: பரதவர்-கடற்கரையில் வசிக்கும் நெய்தல் நிலமக்கள் : கடலில் கப்பல் ஓட்டுவதும் முத்து சங்குகளைக் கடலில் முழுகி எடுப்பதும் இவர்கள் தொழில்: பணிலம் ஆர்ப்ப-சங்கு முழுங்க) கொற்கைக் கடலில் மட்டுமன்று, கடலில் பல இடங்களிலும் கடலிலிருந்து சங்கு எடுக்கப்பட்டது. சங்குகளை(வலம்புரிச் சங்குகள், இடம்புரிச் சங்குகள்) சிறு வாளினால்அறுத்து அரத்தினால் அராளி அழகான வளையல்களைச் செய்தார்கள். 'வல்லோன் வாளரம் பொருத கோணேர் எல்வளை' (நற்...

குவைத் வேலைவாய்ப்பு.

Landmark Group is Hiring! Position - Warehouse Assistant Salary - KD 175 Benefits Free Transportation Incentives Air Ticket Medical Benefits Life insurance Incentives Interested candidates can send their CV's to hrd.kuwait@landmarkgroup.com or walk in to our office. Address - Centrepoint Salmiya 1st Floor

புலால் விலக்கும்' பழக்கம் பெண்களிடம் இருக்கிறது. சில ஆண்களிடமும் இருக்கிறது. இது எதன் அடிப்படையில் தோன்றியது? வெள்ளி, செவ்வாய் புலால் விலக்குவது எதனால்.

அமாவாசை, பௌர்ணமி நாட்களில் சமண, பௌத்த துறவிகள் பிச்சைக்கு வருவாங்க. பிச்சையை பெண்கள் இடவேண்டும் என்பதற்காக பிச்சைக்கு ‘மாதுகரம்' என்று பெயர் வைத்தார்கள் வடமொழியிலே. அமாவாசை, பௌர்ணமியன்று கார் உவா, வெள்ளுவா நாள் என்பார்கள். இந்த நாளிலே பௌத்த துறவிகளெல்லாம் சேர்ந்து சங்கக் கூட்டத்தை அந்த வட்டாரத்திலே ஓரிடத்திலே நடத்துவார்கள். பௌத்தர்கள் தினந்தோறும் பிச்சையெடுப்பர். சமணத் துறவிகள் எட்டு நாட்களுக்கொரு முறை, பதினாறு நாட்களுக்கு ஒரு முறை பிச்சை எடுத்துச் சாப்பிடுவார்கள். அவர்கள் பிச்சைக்கு வருகிற நாட்களிலே அவர்களுக்குப் புலால் கொடுக்கக் கூடாது என்கிற அடிப்படையிலேதான். அவர்க வீட்டுப் புலாலை அவர்கள் உண்ணலாம். 'கொன்றால் பாவம் தின்றால் தீரும்' பௌத்தருடையதுதான். பௌத்தர்கள் நிறைய மீன் உண்பார்கள். இன்றைக்கும் இலங்கையிலே இருக்கிற பௌத்தத் துறவிகள் தினந்தோறும் மீன் உண்பார்கள். கடையிலிருந்து வேலைக்காரர்கள் வாங்கிச் செல்லும்போது செத்த மீனா? என்று பார்த்து வாங்கிப் போவார்கள். உயிரோடு இருக்கிற மீனை வாங்க மாட்டான். ராகுல சாங்கிருத்தியாயன் இதை ஓரிடத்திலே எழுதியிருக்கிறார். அவர்களுக்குப் புலால் க...

ஆலம்மன்

வான் சிறப்பும் மாமழை போற்றுதலும் கண்டது தமிழகம். மழையை 'மாரி' என்பர். மாரி வழிபாடு மழை வழிபாடே! மாரியின் பெயர்களுள் ஒன்று முத்துமாரி என்பது. இது முத்துப் போன்ற மழைத்துளி என்னும் பொருள் தரும். மழைத் துளியை முத்துக்கு உவமை காட்டுதல் இலக்கியங்களில் பெருவழக் குடையது.முத்துமாரி என்பது போல மாரிக்கு அமைந்த மற்றொரு பெயர் 'முத்தாலம்மன்' என்பது 'முத்து ஆலம் அம்மன்' என்னும் முச்சொற்கூட்டே இப்பெயர். இங்கு 'ஆலம்' என்பது நீர்க்கட்டியே. முத்தாலம்மன் என்னும் பெயர் பெருவழக்காக இருந்தும் அதன் பொருள் உணராராய்த் திருத்தம் செய்வார் போல் 'முத்தாரம்மன்' ஆக்கிக் கொண்டு வருகின்றனர். அதுவே திருந்திய வடிவம் என்றும் மகிழ்கின்றனர். முத்துமாலை அணிந்தவன் எனக் காரணம் கண்டு 'முத்து மாலை' எனவும் பெயர் சூட்டிக் கொள்கின்றனர். இவற்றால் இப்பழஞ் சொற்பொருள் மூடுண்டு போதலை அறிக.

விஜயநகர வாரிசுகள்.

கி.பி. 1310 முதல் 1323 வரை தமிழ்நாடு இசுலாமியர் படையெடுப்பால் அலைக்கழிந்தது. மீண்டும் 1383இல் விசய நகரப் பேரரசின் தளபதிகளின் படையெடுப்பால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. விசய நகரப் பேரரசு இசுலாமியருக்கு எதிராக வைதிக நெறியை உயர்ந்த இலட்சியமாகக்கொண்டு தோன்றிய அரசமரபாகும். ஆட்சியதிகாரம் விசயநகரப் பேரரசின் தளபதிகளின் கைக்கு மாறியவுடன் தமிழ் நாடு ஒரு பண்பாட்டு நெருக்கடியை எதிர்கொண்டது. அதாவது வரலாற்றில் முதல்முறையாகத் தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரம் பிறமொழி பேசும் ஆட்சியாளர்களிடம் நிலையாக மாறியது. இந்த ஆட்சியாளரைத் தொடர்ந்து தெலுங்கு மொழி பேசும் மக்கள் பெருமளவு குடியேறத் தொடங்கினர். பிராமணர் தொடங்கிச் சக்கிலியர் ஈறாக இந்தக் குடியேற்றம் அமைந்தது. பிராமணர், பிராமணரை அடுத்த 'மேல் சாதியினரான' புலால் உண்ணாத ரெட்டியார், ராஜுக்கள் இவர்களுக்கு அடுத்த படிநிலைகளில் அமைந்த நாயுடு (வெலமா, கம்மவார், கவர, காப்பு, பலிஜா), இவர்களுக்கும் அடுத்த நிலையில் உள்ள ஆசாரிகள், பெரும்பாலும் புன்செய் நிலத்து விவசாயிகளான நாயக்கர், மிகத்தாழ்நிலையில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியர், தோட்டி வேலை செய்யும் சக்கிலியர் எ...

ஐயை.

பெண் உடலில் மென்மையானவள். உள்ளத்தில் வன்மை யானவள். உணர்விலோ ஆழமும் அகற்சியும் கொண்டவள். பல்லாயிரம் எண்ணக்கால்கள் அவள் உள்ளத்தில் ஊன்றியுள்ளன; அவற்றிற்குச் சிறகுகள் உண்டு; வல்லமை உண்டு. அவ்வெண்ணங்கள் ஒன்றிலும் ஊன்றாமலிருக்கும் வரை, அவளை நிலைப்படுத்த எவராலும் இயலாது. ஒன்றில் ஊன்றி விட்டாலோ அவற்றைச் சிறிதே பெயர்க்கவும் எவராலும் முடியாது! எத்துணைத்துயர் வந்தாலும் அவள் அந்நிலையினின்றும் விலகவே மாட்டாள்! பெண்ணின் உள்ளம் மற்றொரு பெண்ணாலும் அறியப் படாத கடலடி; மலைமுகரே அகன்று விரிந்த வானம்! அப்படிப்பட்ட பெண்மை நிரம்பிய அந்த நெஞ்சம், தான் விரும்பிய ஓர் ஆணின் உள்ளத்தில் காலூன்றி விட்டாலோ, அங்கேயே அது நுசர்கின்றத: பசி தணிகின்றது; நிறைவடைகின்றது; அயர்கின்றது. இறுதியில் துறக்கத்தையும் அமைத்துக் கொள்ளு கின்றது. ஒருவித்து பூவாக மலர்ந்து, காயாக முதிர்ந்து, கனியாக நிறைவுறுதல்போல், ஒரு பெண் பேதையாய் விளங்கிப் பெண்மையாய்ச் சமைந்து, தாய்மையாய் நிறைவடைகின்றாள்! இம்முப்பருவங்களும் ஒருபெண்ணின் மூன்று வாழ்க்கைகள். இம்மூன்று வாழ்க்கை நிலைகளிலும் அவள் உளத் தாலும், உருவத்தாலும் ஒவ்வொரு படி உயர்ந்து விளங்குகின்றாள...

பார்ப்பானுக்கு மூப்பு பறையன்.

பெருந்தெய்வம் அல்லாத சிறுதெய்வக் கோயில் களில் (இவற்றின் தலையாய பண்புகள் ஆகம வழிப் பூசைகள் இன்மையும், இரத்தப் பலி கொடுத்தலும்) சடங்கியலான தொல்லெச்சங்கள் மூலம் இன்று தாழ்த்தப்பட்ட சாதியராகக் கருதப்படுவோரில் சில சாதியார், அக்காலத்தில் கோயில் பூசை செய்பவராக இருந்ததை அறிய முடிகிறது. இந்த உண்மையை முதன் முதலாக 1874இல் டபிள்யூ. ஜே. வால்கௌஸ் என்ற ஆராய்ச்சியாளர் தொட்டுக்காட்டினர். இவர்களுள் குறிப்பிட்டுச் சொல்லத் தகுந்தவர் பறையர்கள் ஆவர். 'சங்க இலக்கியத்தில் பறையர்கள் மதிக்கத்தக்க இடத்தைப் பெற்றவராகத் தெரிகிறது.  என்று அனுமந்தன் குறிப்பிடுகிறார். சங்க காலத்தில் மதச் சடங்குகளைச் செய்தவர்களில் பறையர்களும் உண்டு என்று ஜார்ஜ் எல். ஹார்ட் குறிப்பிடுகிறார். 'தூய்மை, தீட்டு இவை பற்றிய கோட்பாடுகள் பிராமணர் வருகையினால்தான் தமிழ்நாட்டில் இடம்பெற்றன' என்கிறார் அவர். இன்றும் தமிழ்நாடு முழுவதும் மாரியம்மன் என்ற தெய்வத்தின் கணவராகப் பறையர்களே கருதப்படுகின்றனர். பல இடங்களில் மாரியம்மன் கோயில் திருவிழா தொடங்கும்போது பறையர்க்குக்காப்பு கட்டும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. திருவாரூர் தியாகராச...

ஆங்கிலேயப் பாண்டியன்.

Image
  ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டில் இருநூறு ஆண்டுக்காலம் நிலை பெற்றிருந்தனர். நாட்டு மக்களை அடிமைப்படுத்திய வல்லாண்மை அரசாக அவர்களுடைய அரசு இருந்தது. 'அதிகாரம்' என்ற எல்லையினைக் கடந்து தமிழ் மொழியோடும் மக்களோடும் கலந்த மனிதர்கள் சிலரும் அவருள் இருந்தனர். அதிகாரிகள், அதிகாரமுடைய மத குருக்கள் என்ற எல்லையினை மீறித் தமிழ்மக்களும் அவர்களோடு கலந்து பழகினர். அதன் விளைவாக அரசியல் நிறுவனங்களையும் ஆவணங்களையும் தாண்டி எளிய மக்கள் நெஞ்சில் இடம்பிடித்த ஆங்கிலேயர் சிலரும் உண்டு. சாயர்புரம் (Sawyer), கேம்பலாபாத் (Camphell), காலன் குடியிருப்பு (Collins), பீசர் பட்டணம் (Ficher) காசிமேஜர்புரம் (Cassa Major), டக்கர் அம்மாள்புரம் (Tucker), பாகிட் மாநகரம் (Burkit) பேட் மாநகர் (Pate) முதலிய ஆங்கிலேயர் பெயரில் அமைந்த சில ஊர்ப் பெயர்கள் இதற்குச் சான்றாகும். தனிப்பட்ட ஆங்கிலேயரின் உதவியினைப் பெற்ற தமிழர் சிலர் சாதி, மத, இன, மொழி எல்லைகளைத் தாண்டி ஆங்கிலேயர் பெயர்களைத் தம் குழந்தைகளுக்கு இட்டு வழங்கியதும் உண்டு. ஆங்கிலேய ஆதிக்க எதிர்ப்பில் இறுதிவரை முனைமழுங்காமல் நின்ற வ. உ. சி. தமக்கு உதவிசெய்த ஆங்கில நீதிபத...

பருத்திப் பெண்டும் பள்ளர் நெசவும் பாய் நெசவும்.

கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் பருத்தித் துணி நெசவு செய்த மக்கட் பிரிவினர் யார் என்பதை அறிய இயலவில்லை. ஆயினும் சங்க இலக்கியங்களில் நூற்றல் தொழில் பற்றிச் சில குறிப்புக்கள் காணக்கிடக்கின்றன. பருத்திப் பெண்டு. என்னும் தொடர் இரண்டு இடங்களில் வருகிறது. பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன (பறம்:125) பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்து (புறம் : 326) என வரும் அடிகளால் பெண்கள் இரவிலும் சிறிய விளக் கொளியில் நூல் நூற்ற செய்தியினை அறிகிறோம். நூல் என்ற சொல்லுக்குப் பதிலாகப் பனுவல் என்ற சொல்லும் காணப்படுகிறது. பார்ப்பனர் மார்பில் அணிந்த முப்புரி நூல் முந்நூல் எனப்பட்டது. நூல் என்ற சொல்லுக்கு இலக்கணம் (சாத்திரம்) என்றும் பொருள். சங்க இலக்கியக் குறிப்புக்கள் நூற்றல் தொழிலைப் பெண்களோடு சேர்த்தே பேசுகின்றன. உரையாசிரியர் குறிப்புக் களிலிருந்து கைம் பெண்களே சங்க காலத்தில் நூற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர் என்று தெரிகிறது. இந்தச் செய்தி நமக்கு அதிர்ச்சியாக அமைகிறது. நூற்கும் தொழில் தனக்குரிய சமூக மரியாதையினை அக்காலத்தில் பெற்றிருக்கவில்லைபோலும் எனவேதான் அது கைம்பெண்களுக்குரிய தொழிலாகக் கருதப...

சட்டைநாதர் (சட்ட நாதர்)

 சிவபெருமான் தன் வீரச்செயல்களில் ஒன்றாக யானை அரக்கனைக் கொன்று, தோலை உரித்து மேற்சட்டைபோல அணிந்து நின்றதனால் அவருக்குச் 'சட்டைநாதர்' (சட்ட நாதர்) என்ற பெயரும் பிறந்தது. சீர்காழியில் சட்டைநாதன் என்ற பெயரைப் பெருவழக்காகக் காணலாம். பாம்பின் சட்டை என நாம் குறிப்பிடும் மேல்தோலை இலக்கியங்கள் பாம்பின் 'உரி (உரிக்கப்பட்டது) என்றே குறிப்பிடுகின்றன. பேரா.தொ.ப

வெள்ளைக் குப்பாயத்தர்.

'வெள்ளைக் குப்பாயத்தர்' என்ற தொடர் திருவாசகத்தில் வருகின்றது. இக்காலத்தில் 'ஜிப்பா' என வழங்கப்பெறும் சட்டையினை இது குறிக்கின்றது. அக்காலத்தில் குதிரை வணிகராகத் தமிழ்நாட்டுக்கு வந்த அரேபியர் இந்த உடையினை அணிந்திருந்தனர்.

வரிச்சுமைக் கொடுமை.(சிலப்பதிகாரம்)

  குடிமக்கள் தலையிலே தாங்கமுடியாத வரியைச் சுமத்தும் அரசு வாழமுடியாது. அவ்வரசு குடிமக்களால் கவிழ்க்கப்படும். அந்த அரசின் தலைவன் எவ்வளவு ஆற்றல் படைத்தவனா யிருப்பினும், அவனால் ஆட்சியிலே நிலைத்து நிற்க முடியாது. மக்கள் வரிகொடுக்க மறுப்பார்கள்; வரிகொடுக்க மறுப்போரின் துணைகொண்டு ஒரு சிற்றரசன் அந்தப் பேரரசைக் கைப்பற்றிக் கொள்வான். இவ்வாறு, ஆளுவோர்க்கு அறிவுரை கூறப்படு கின்றது. கறைகெழு குடிகள் கைதலை வைப்ப. அறைபோகு குடிகளொடு, ஒருதிறம் பற்றி, வலம்படு தானை மன்னர் இல்வழி புலம்பட இறுத்த விருந்தின் மன்னர். (அந்திமாலை 9-12)

வெள்ளிக்கிழமை சிறப்பு நாளாகக் ஏன் கொண்டாடப்படுகிறது?

அமாவாசை, பௌர்ணமி நாட்களில் தமிழ்நாட்டுப் பெண்கள் காலையிலேயே குளித்து, பழையன உண்ணாமல் நோன்பிருக் கின்றனர். அன்று வரும் காவியாடைப் பிச்சைக்காரர்களுக்கு உணவளிப்பது நோன்பின் (விரதத்தின்) பயன் என்கின்றனர். அமாவாசை, பௌர்ணமி எனப்படும் காருவா, வெள்ளுவா நாட்களில் ஒரு வட்டத்திலுள்ள பௌத்தத் துறவிகள்கூடி 'சங்கம்’ நடத்துவர். இலங்கைச் சிங்களவர் இதனைப் 'போயா தினம்' என்பர். அன்று பிச்சைக்கு வரும் பௌத்தத் துறவிகளுக்கு உணவிடவே பெண்கள் மட்டும் இவ்வழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்று தெரிகிறது. இந்த நோன்பு ஆண்களுக்குரியதல்ல என்பதும், இது குறித்த பதிவுகள் தேவாரத் திருவாசகங்களிலேலா பாசுரங்களிலோ காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தகுந்தது. தொழுகைக்குரிய சிறப்பு நாளாக வெள்ளிக்கிழமையினை இசுலாமியர்களும், ஞாயிற்றுக்கிழமையினைக் கிறித்தவர்களும் கருதுவதுபோல பௌத்தர்கள் வெள்ளிக்கிழமையினைப் புனித நாளாகக் கருதுவர். வீட்டினைத் தூய்மை செய்வதற்கும் கோயில் வழிபாட்டிற்கும் உகந்த நாளாகப் பெண்கள் வெள்ளிக்கிழமையினையே கருதுகின்றனர். இது பௌத்த நெறியின் எச்சமாகும். இதுவும் சைவ, வைணவ தோத்திர, சாத்திர நூல்களில் பேசப்படாத செய...

பெருஞ்சோறு

 'பெருஞ்சோறு' என்னும் சொல்லும் இலக்கியங்களில் காணப்படுகிறது. இது அரசன் போருக்குச் செல்லுமுன் வீரர் அனைவரோடும் கூடி உண்டதைக் குறிக்கிறது. எனவே இது ஒரு போர்ச்சடங்கு நிகழ்ச்சியாகச் செய்யப்பட்டது எனத் தோன்றுகிறது. இந்த உணவு ஊனும் சோறும் கலந்தது என்பதனை 'ஊன்துவை அடிசில்' என்று குறிக்கிறது பதிற்றுப்பத்து. விசய நகரப் பேரரசு காலம் தொடங்கித் தமிழ்நாட்டுச் சத்திரங்களில் சோறு விற்கப்பட்டு, பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 'ஹோட்டல்' எனப்படும் உணவு விடுதிகள் தொடங்கப்பட்டன. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் நகரங்களிலும், சிறு நகரங்களிலும் காசுக்குச் சோறு விற்கும் கடைகள் உண்டாயின. பேரா.தொ.ப

முல்லைத் தெய்வம்.

 முல்லைத் தெய்வம் முல்லை நிலத்தில், ஆடுமாடுகட்குப் புல் வளரவும், ஆயருண விற்கு வானாவாரிப் பயிர்கள் விளையவும், மழை வேண்டிய தாயிற்று. மழை கரிய முகிலினின்று விழுவதால், முகிலையே தெய்வமாகக் கொண்டு மால் என்று பெயரிட்டு வணங்கினர். "இன்னிசை யெழிலியை யிரப்பவு மியைவதோ" (கலித்.கசு) என்பதால், முகில் தெய்வமாக வணங்கப்பட்டமை அறியப்படும். குமரிநிலை யியல் மால் - க. கருமை. மால் கடல்'' (பெரும்பாண். சஅள). உ.கருமுகில். "சிலைமா லுருமு’" (தஞ்சை வா. கச). ௩. கரியவ னான திருமால். “நீர்செல நிமிர்ந்த மாஅல் போல”  மால் என்னும் தெய்வப் பெயர், உலகவழக்கில் என்றும் திருமால் என்று அடைபெற்றே வழங்கும். மாலை மாயோன் என்னுஞ் சொல்லாலுங் குறிப்பது இலக்கிய வழக்கு. மாயன் மாய வன் என்பன மாயோன் என்பதன் மறு வடிவங்கள். மால் மாயன் என்னும் இரண்டும் ஒரே மூலத்தினின்று தோன்றிய ஒருபொருட் சொற்கள். மால்-மா-மாயோன் - கரியவன்.

ஆழ்வார்.

 ‘ ஆழ்வார்' என்ற சொல்லிற்கு ‘அரச மரபில் பிறந்த பெண்' என்பதே பொருளாகும். அரச குடும்பத்துப் பெண்களும் அரசனின் மனைவியும் மற்றவர்களால் ‘ஆழ்வார்' என்றே அழைக்கப்பட்டனர். சோழர் காலக் கல்வெட்டுக்களும் வைணவ உரையாசிரியர்களும் இக்கருத்தினை உறுதி செய்கின்றனர். 

அணங்கு என்றால் என்ன?

அணங்கு என்பது, தன் அழகு மிகுதியால் ஆடவரை மயக் கிக் கொல்லும் பெண்பேய். "தாக்கணங்கு” என்றார் திருவள் ளுவரும் (குறள். 1082). கொல்லிமலை அப்பெயர் பெற்றது ஒரு தாக்கணங்கினாலேயே. கொல்வது கொல்லி. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து. பரிமேலழகர் (மானுட மாதராதல் தெளிந்த தலைமகன் அவள் நோக்கினானாய வருத்தம் கூறியது.) நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் - இப்பெற்றித்தாய வனப்பினை உடையாள் என் நோக்கிற்கு எதிர் நோக்குதல்; தாக்கு அணங்கு தானைக்கொண்டன்னது உடைத்து - தானே தாக்கி வருத்துவதோர் அணங்கு தாக்குதற்குத் தானையையும் கொண்டு வந்தாற் போலும் தன்மையை உடைத்து (மேலும், 'அணங்குகொல் ஆய்மயில் கொல்' என்றமையான், இகரச்சுட்டு வருவிக்கப்பட்டது. எதிர் நோக்குதல்என்றமையின், அது குறிப்பு நோக்காயிற்று. வனப்பால் வருந்துதல் மேலும் குறிப்பு நோக்கால் வருந்துதல் கூறியவாறு. 'நோக்கினாள்' என்பதற்கு 'என்னால் நோக்கப்பட்டாள்' என்று உரைப்பாரும் உளர்.)

கருணாநிதியின் தரக்குறைவான பேச்சு.

தமிழக சட்டப் பேரவையில், அவையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் எழுந்த முதல் தரக்குறைவான பேச்சுக்கு சொந்தக்காரர், இன்று தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியாகத் திகழும் கருணாநிதிதான் என்றால் இன்றைய தலைமுறையினருக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால், அதுதான் உண்மை. அன்று ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் குறிப்பிடத்தக்க உறுப்பினர் அன்றைய பேசின் பிரிட்ஜ் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த  டி.என். அனந்தநாயகி. ஒருமுறை அவர் சட்டப் பேரவையில்திமுகவை விமர்சிக்கும் விதத்தில், "எங்கே இருக்கிறது திராவிட நாடு?' என்று கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சி வரிசையில் இருந்த மு. கருணாநிதி எழுந்து நின்றபோது, அவை ஒரு வினாடி மௌனமானது. அவர், "அந்த நாடாவை அவிழ்த்து...' என்று கூறி, சற்று நிறுத்தி, பிறகு, "நான் குறிப்பிட்டது பாவாடை நாடாவை அல்ல, கோப்புகளின் நாடாவை' என்று கூறும்போதே அவையில் ஒரே கூச்சலும் கண்டனமும் எழுந்தன என்று அன்றைய காலகட்டக் காங்கிரஸ் பேசுவதுண்டு. தலைவர்கள் மேடையில் தரக்குறைவான மேடைப் பேச்சுகளும், சட்டப் பேரவை விவாதங்களும் 1962-க்குப் பிறகு திமுக கணிசமான உறுப்பினர்களுடன் அவ...

பழங்குடி குறுநிலத் தலைவன் சிவன்.

 சிவபெருமானே ஒரு Tribal chieftain. அதாவது பழங்குடியைச் சேர்ந்த குறுநிலத் தலைவன் அப்படிம்பாரு நாட்டார் வழக்காற்றியல் வகுப்பெடுத்த பேராசிரியர். சிவபெருமான் தலையில மாட்டுக் கொம்பு இருக்கு. ஊமத்தம் பூ இருக்கு. ஒரு இனக்குழுத் தலைவன் தன்னை எப்படி அலங்கரித்துக் கொள்கிறானோ அந்த மாதிரிதான் இருக்கு. அரப்பால இருந்த பசுபதி வழிபாடும் அப்படித்தான் என்பார் பாண்டு என்னும் நாட்டுப்புற ஆய்வாளர், பேரா.தொ.ப.

மதுரையின் அரசி.

Image
இன்னும் மதுரை மக்களுடைய நம்பிக்கையின்படி மதுரை வந்து மீனாட்சிப் பட்டினமே தவிர சொக்கநாதபட்டினம் அல்ல. மீனாட்சியினுடைய ஆளுகைக்கு உட்பட்ட ஊர். தமிழ்நாட்டிலேயே ஒரு பெண் முடிசூடி அரசாளுவதாக ஒரு திருவிழா நடக்கிறது. அங்கே மட்டும்தான். பட்டாபிஷேகம் நடக்கிறது. அவர் வந்து ராணியின் கணவர் தானே தவிர, ராஜா அல்ல. இதான் மதுரையினுடைய சிறப்பு. ஒரு நல்ல உதாரணம் தமிழ்நாட்டிலே மீனாட்சி சொக்கர் தாலாட்டு. எல்லா இடங்களிலும் வழங்குகிற ஒரு தாலாட்டு. இந்த தாலாட்டு வேறு எந்த தெய்வத்துக்கும் கிடையாது. வட்டார ரீதியாகவோ, சாதி ரீதியாகவோ வேறு எந்த தெய்வத்துக்கும் கிடையாது. மீனாட்சி தெய்வத்துக்கு மட்டும்தான் தமிழ்நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தாலாட்டு பாடல்கள் உள்ளது. எல்லாச் சாதியும், ஏதேனும் ஒரு வகையிலே அரசியல் ரீதியாகவும், சமூகரீதியாகவும் மதுரையோடு பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். வெறுமனே அது அவர்களுடைய வாழ்வாதாரமாக மட்டும் அமைய வில்லை. பேரா.தொ.ப.

திராவிட மாடல் இரண்டாவது திருமணம்.

  தமிழக சட்டப் பேரவையில், அவையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் எழுந்த முதல் தரக்குறைவான பேச்சுக்கு சொந்தக்காரர், இன்று தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியாகத் திகழும் கருணாநிதிதான் என்றால் இன்றைய தலைமுறையினருக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால், அதுதான் உண்மை. அன்று ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் குறிப்பிடத்தக்க உறுப்பினர் அன்றைய பேசின் பிரிட்ஜ் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த  டி.என். அனந்தநாயகி. ஒருமுறை அவர் சட்டப் பேரவையில்திமுகவை விமர்சிக்கும் விதத்தில், "எங்கே இருக்கிறது திராவிட நாடு?' என்று கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சி வரிசையில் இருந்த மு. கருணாநிதி எழுந்து நின்றபோது, அவை ஒரு வினாடி மௌனமானது. அவர், "அந்த நாடாவை அவிழ்த்து...' என்று கூறி, சற்று நிறுத்தி, பிறகு, "நான் குறிப்பிட்டது பாவாடை நாடாவை அல்ல, கோப்புகளின் நாடாவை' என்று கூறும்போதே அவையில் ஒரே கூச்சலும் கண்டனமும் எழுந்தன என்று அன்றைய காலகட்டக் காங்கிரஸ் பேசுவதுண்டு. தலைவர்கள் மேடையில் தரக்குறைவான மேடைப் பேச்சுகளும், சட்டப் பேரவை விவாதங்களும் 1962-க்குப் பிறகு திமுக கணிசமான உறுப்பினர்களுடன் ...

தலைவர் பிரபாகரன்.

Image
 அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது. -கன்பூஷியஸ்

ஊழலின் ஆதி ஊற்றே.

 திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தபோது பெரியாருக்கு வயது 72. மணமகள் மணியம்மைக்கு வயது வெறும் 26. பொருந்தாத திருமணத்தை எல்லாம் பொதுமேடையில் வெளுத்துவாங்கியவர்; கட்டுவதுதான் கட்டுகிறீர்கள், ஒரு வயதான கிழத்தைப் பார்த்துக் கட்டிக்கொள்ளக்கூடாதா என்று கேலியாகக் கேள்வி கேட்டவர்; அப்படிப்பட்ட பெரியார் எடுத்த முடிவு அதிர்ச்சியைக் கொடுத்தது அண்ணாவுக்கு. 9 ஜூலை 1949 அன்று மணியம்மையைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டார் பெரியார். ஆகஸ்டு 15 விவகாரம் வெடித்தபோது கட்சித்தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாலும் கவலை இல்லை என்று காத்திருந்தார் அண்ணா. ஆனால், மணியம்மை திருமண விஷயத்தில் பெரியாரின் முடிவுக்காகக் காத்திருக்க விரும்பவில்லை. முடிவெடுத்து விட்டார். கழகத்தில் இருந்து விலகிக்கொள்வோம்! தனி வழி காண்போம்! அண்ணாவின் அறிவிப்புக்கு பலத்த வரவேற்பு. அண்ணாவுக்கு ஆதரவு தெரிவித்தோர் பெயர்கள் திராவிட நாடு இதழில் வெளியாகின. அந்தப் பட்டியலின் தலைப்பு: கண்ணீர்த் துளிகள்! பெரியாரின் முடிவைக் கண்டுக் கண்ணீர்விட்டுக் கதறுவதாகச் சொன்னார் அண்ணா. பின்னர் அந்த வார்த்தையைக் கொண்டே அண்ணாவின் ஆதரவாளர்களைக் கேலி செய்தார் பெரி...

கருணாநிதியும் கண்ணதாசனும்.

https://ta.quora.com/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/answers/360629058?ch=10&oid=360629058&share=c1cc1113&srid=uXpn8w&target_type=answer  

டால்ஸ்டாயும் வாரியார் சுவாமிகளும்.

https://youtu.be/mjUs6p2O700

மேதகு பிரபாகரன் அவர்களின் தீர்க்கதரிசனம்.

எங்கள் மீது நீட்டப்படும் துப்பாக்கிகள் என்றோ ஒருநாள் சிங்கள மக்கள் மீது திரும்பும் என்று அன்றே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தெரிவித்திருந்தார்.