களம்புகல் ஓம்புமின் தெவ்வீர்! எம்மில் உண்டு ஒரு பொருநன் வைகல் எண்டேர் செய்யும் தச்சன் திங்கள் வழித்த கால் அன்னோனே. நாள் ஒன்றுக்கு எட்டுத் தேர் செய்யும் தச்சன் ஒரு மாத காலம் முயன்று உழைத்துச் செய்த தேர்ச்சக் ரத்தின் ஆரக்கால் போன்ற போர்வீரன் எம்மிடம் உள்ளான். சண்டைக்கு முண்டியடித்து வராதீர், பகைவரே!"
அதே போன்று, நுகர்தல், தொடுதல், தென்றல் காற்றை உணர்தல், சூரியனின் கதிர்களை உணர்தல் ஆகியவற்றையும் செய்து பாருங்கள். நிலவைப் பாருங்கள்; அதை வெறுமனே பார்ப்பதிலேயே நிறைகவனம் உள்ள ஒரு அமைதியான நீர்நிலை போல் ஆகிவிடுங்கள்; அப்போது அந்த நிலவு அபரிமிதமான அழகுடன் உங்களுக்குள் பிரதிபலிக்கப்படும். உங்களது வாழ்க்கையில், இடைவிடாமல் நிறைகவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். மீண்டும் மீண்டும் நீங்கள் மறக்கலாம். அதற்காக துக்கப்படாதீர்கள். அது இயல்பானது. பல லட்சம் பிறவிகளாக நீங்கள் இந்த நிறைகவனத்தை முயன்று பார்க்கவில்லை. எனவே, நீங்கள் மீண்டும் மீண்டும் இதை மறப்பது இயல்பானது, இயற்கையானது. ஆனால், உங்களுக்கு மீண்டும் நினைவு வரும் போது, மீண்டும் கவனிக்கத் தொடங்குங்கள். ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் : நீங்கள் கவனிப்பதற்கு மறந்துவிடும் போது, அதற்காக வருத்தப்படாதீர்கள்; அதற்கான மனம் வருந்தாதீர்கள், அப்படிச் செய்தால், மீண்டும் நீங்கள் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருப்பீர்கள். "நான் தவறவிட்டு விட்டேனே," என்று நீங்கள் சங்கடப்படாதீர்கள். #ஓஷோ
Comments
Post a Comment