Posts

Showing posts from April, 2025

நிறை கவனம் ஓஷோ.

அதே போன்று, நுகர்தல், தொடுதல், தென்றல் காற்றை உணர்தல், சூரியனின் கதிர்களை உணர்தல் ஆகியவற்றையும் செய்து பாருங்கள். நிலவைப் பாருங்கள்; அதை வெறுமனே பார்ப்பதிலேயே நிறைகவனம் உள்ள ஒரு அமைதியான நீர்நிலை போல் ஆகிவிடுங்கள்; அப்போது அந்த நிலவு அபரிமிதமான அழகுடன் உங்களுக்குள் பிரதிபலிக்கப்படும். உங்களது வாழ்க்கையில், இடைவிடாமல் நிறைகவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். மீண்டும் மீண்டும் நீங்கள் மறக்கலாம். அதற்காக துக்கப்படாதீர்கள். அது இயல்பானது. பல லட்சம் பிறவிகளாக நீங்கள் இந்த நிறைகவனத்தை முயன்று பார்க்கவில்லை. எனவே, நீங்கள் மீண்டும் மீண்டும் இதை மறப்பது இயல்பானது, இயற்கையானது. ஆனால், உங்களுக்கு மீண்டும் நினைவு வரும் போது, மீண்டும் கவனிக்கத் தொடங்குங்கள். ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் : நீங்கள் கவனிப்பதற்கு மறந்துவிடும் போது, அதற்காக வருத்தப்படாதீர்கள்; அதற்கான மனம் வருந்தாதீர்கள், அப்படிச் செய்தால், மீண்டும் நீங்கள் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருப்பீர்கள். "நான் தவறவிட்டு விட்டேனே," என்று நீங்கள் சங்கடப்படாதீர்கள். #ஓஷோ

பிறப்பு இறப்பு ஓஷோ.

 நம் வாழ்வில் இரண்டு மாபெரும் நிகழ்ச்சிகள் நம்முடைய அனுமதி இல்லாமல் நேருகின்றன. ஒன்று பிறப்பு. அடுத்தது இறப்பு நாம் பிறக்கும்பொழுதே இறப்பும் கூடவே பிறக்கிறது. இந்த பிறப்புக்கும். இறப்புக்கும் இடைப்பட்ட காலமே வாழ்வு இந்த வாழ்வின் அமைப்பு, பெரும்பாலும் நம் கையில்தான் இருக்கிறது. சிறு வயதில் கோலி, நீச்சல், ஓடுதல் போன்ற விளையாட்டுப் பந்தயங்களில் ஜெயிக்க வேண்டும் என்ற ஆர்வம், பிறகு பணம், அந்தஸ்து, படிப்பு, வசதிகள் போன்றவற்றில் அடுத்தவர்களைவிட நாம் உயர்வாக இருக்க வேண்டும் என்ற கொள்கையாக மாறுகிறது. ஆக மனிதனின் மனம் அடிப்படையில் மாறவே இல்லை. இலக்குதான் மாறி இருக்கிறது. இதை ஒருவன் எவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்ளுகிறானோ அவ்வளவு சீக்கிரம் அவன் பார்வையின் கோணம் மாறுகிறது. உலகத்தை நோக்கியே நிற்கும் தன் பார்வையை (Extrovert) 180 டிகிரி திருப்பி, தன்னை நோக்க ஆரம்பிக்கிறான் (Introvert). இந்த உலகத்துப் பொருள்களுக்கு ஆசைப்படுபவன் யார்? அதனால் முடிவில் அடையப் போகும் பயன் என்ன? என்று ஆராயத் தொடங்குகிறான். ஒருவனின் ஞானம் இங்குதான் ஆரம்பமாகிறது. ஒரு விழிப்புணர்வு உண்டாகிறது. இந்த விழிப்புணர்வோடு நாம் இந...