சாவா மூவா பேராடு.
கோவிலில் தினமும் விளக்கேற்ற, எண்ணெய் வேண்டுமல்லவா? அதற்காக 'சாவா மூவா பேராடு' என்று ஒரு திட்டத்தை உருவாக்குகிறார். கோயிலுக்கு தானம் வழங்குபவர்களிடம்
மாடுகளை தானமாகத் தருமாறு அரசு உத்தரவு இடப்படுகிறது. அதன்படி கிடைத்த ஆடு மாடுகளை ஏழை எளிய சாமானிய மக்களுக்கு பிரித்துக்கொடுத்து அவர்கள் அந்த உயிரினங்களை பராமரித்து அதன் மூலம் வரும் வருமானத்தில் பெரும்பங்கை அவர்கள் எடுத்துக்கொண்டு ஒரு பங்கை நம் கோயிலுக்கு தீபம் ஏற்ற எண்ணெயாக, நெய்யாக வழங்கவேண்டுமென்று திட்டம் வகுத்தார்.
இதுதான் சாவா மூவா பேராடு திட்டமாகும்.
திருக்கோயில் தீபமேற்றும் பணியும் தொடர்ச்சியாக நடைபெறும். மக்களின் வாழ்வாதாரமும் தடையின்றி மேம்படும் என்பதற்காக செயல்படுத்தப்பட்ட மன்னனின்(ராஜராஜசோழன்) பாந்துபட்ட சிந்தனைத் திட்டமாகும்!
Comments
Post a Comment