Posts

Showing posts from July, 2022

தமிழிலிருந்து மலையாளம்

 தமிழிலிருந்து மலையாளம் தமிழ் மொழியிலிருந்துதான் மலையாள மொழி உருவானது என்ற கருத்தை கால்டுவெல், குண்டர்ட் போன்றவர்கள் ஆரம்ப காலத்தில் வெளியிட்டபோது கேரளத்து அறிஞர்கள் அதை ஒத்துக்கொண்டனர். பேராசிரியர் இளங்குளம் குஞ்சம்பிள்ளை என்ற மலையாள மொழி ஆய்வாளர் இந்தக் கருத்தை விரிவாக ஆராய்ந்திருக்கிறார். சங்க காலத்திலிருந்து கி.பி. 8-ம் நூற்றாண்டுவரை கேரளத்தின் செய்யுள் மொழியும், பேச்சுவழக்கு மொழியும் தமிழாகத்தான் இருந்தது என்கிறார் இளங்குளம். கேரளத்தின் நவீனப்படைப்பாளிகளும் சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து, சங்கப் பாடல்கள் சில ஆகியவற்றைத் தங்கள் மண்ணின் கவிதைகளாகவே உரிமை கொண்டாடுகிறார்கள். வையாபுரிப்பிள்ளையின் கருத்துப்படி தொல்காப்பியம்கூட தென் கேரளத்தைச் சார்ந்தது. குலசேகர ஆழ்வார் கேரள அரசர்; சேரமான் பெருமாள் நாயனார்; புறப்பொருள் வெண்பா மாலை ஆசிரியர் வேணாட்டிகள் என கேரளப் படைப்பாளிகளின் நீண்ட பட்டியலே உள்ளது. அதோடு தீயாட்டுப் பாட்டுகள், சர்வப்பாட்டுகள், கிருஷிப்பாட்டுகள், வள்ளப் பாட்டுகள், சாற்றுப் பாட்டுகள் முதலிய நாட்டார் பாடல்களும் தமிழ் செல்வாக்குடையவை. கி.பி. 14-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘...

தேன் நிலவு

Image
தேன். மனிதனுக்குக் கிடைத்த முதல் தலைமுறை உணவுகளுள் ஒன்று. முக்கியமானது. அதற்கு நிகரான ருசியை வேறு எதிலும் கண்டிராத மனிதன் ஆதி காலத்தில் தேனைக் கடவுளாகவே நினைத்தான். அது பரிசுத்தமானது என்று நம்பினான். உண்மையானது என்று கருதினான். உண்மையானதும் பரிசுத்தமானதும் இனிப்பானதும் ருசியானதுமான ஒன்று கடவுளாக மட்டுமே அல்லவா இருக்க முடியும்? பூவிலிருந்து தேனை உறிஞ்சி எடுத்துச் சென்று அடைகளில் சேகரிக்கும் தேனீக்கள் தான் மனித குலத்தின் முதலாசிரியர்கள். கிடைத்த இடத்தில் உண்பதல்ல. அடுத்த வேளைக்குச் சேகரித்து வை. அது ரொம்ப முக்கியம். வேளாவேளைக்குத் தேடித் தேடி ஓடிக்கொண்டிருக்காதே. உட்கார்ந்து சாப்பிடப் பழகு. நாளைக்கு நீ உட்கார்ந்து சாப்பிட வேண்டுமானால் இன்றைக்கு ஓடித் தேடி உழைத்தால்தான் உண்டு. சொற்களில்லாமல் இந்தப் பாடங்கள் மனிதனுக்குப் புரிந்ததும் தேன் அவனது தெய்வங்களுள் ஒன்றாகிப் போனது. இன்றைக்குப் பிறந்த குழந்தைக்கு முதல் உணவு தாய்ப்பால். ஆதி காலத்தில் ஒரு குழந்தை பிறந்தால் உடனே அதன் உதட்டில் ஒரு சொட்டுத் தேனைத் தான் தடவுவார்கள். குழந்தையின் முதல் அழுகையைச் சிரிப்பாக மாற்றும் கடவுள் அது. அதே தேனைத்தான்...

தலைவரின் தீர்க்கதரிசனம்.